வாக்களித்து விட்டு வீட்டுக்கு வந்த முதியவர் திடீர் சாவு

வாக்களித்து விட்டு வீட்டுக்கு வந்த முதியவர் திடீர் சாவு

முதியவர் மரணம் 

சேலம் மாவட்டம்,கோனேரிப்பட்டியில் வாக்களித்து விட்டு வீட்டுக்கு வந்த முதியவர் மரணமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கோனேரிப்பட்டியை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 73). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கோனேரிப்பட்டியில் உள்ள ஆர். சி. நடுநிலைப்பள்ளியில் ஓட்டு போட சென்றார். பின்னர் வாக்களித்து விட்டு அவர் வீட்டுக்கு சென்றார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வீட்டுக்கு சென்ற அவர் குளித்துவிட்டு படுத்தார்.

நீண்ட நேரம் ஆகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை எழுப்பியபோது அவர் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாக்களித்து விட்டு வீட்டுக்கு வந்த முதியவர் திடீரென இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. சுருக்கு

Tags

Next Story