மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் சாவு

மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் சாவு

முதியவர் பலி 

கலவை அருகே பசுமாட்டை ஒட்டிச்சென்ற முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்,கலவை அருகே உள்ள கணியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தாமரை (76).இவர் சில நாட்களுக்கு முன்பு விவசாய நிலத்திற்கு பசு மாட்டை ஓட்டிச்சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவர் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் செந்தாமரை மீது மோதியது.

இதில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தாமரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் கலவை-சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடததி வருகிறார்.

Tags

Read MoreRead Less
Next Story