இரவு நேரத்தில் வேகமாக வந்த பைக் மோதி முதியவர் உயிரிழப்பு

இரவு நேரத்தில் வேகமாக வந்த பைக் மோதி முதியவர் உயிரிழப்பு

காவல் நிலையம் 

அரவக்குறிச்சி அருகே இரவு நேரத்தில் நடந்து சென்றவர் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி முதியவர் உயிரிழந்தார்

திருச்சி மாவட்டம் தொட்டியம், ஸ்ரீ சமுத்திரம், பொன்னி நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சுகுமார் வயது 40. இவர் மார்ச் 22ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில், அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது,கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, வெரிச்சனம் பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி வயது 65. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிவசாமி மனைவி ஆனந்தி வயது 33, அவரது மகள் ஜீவிதா வயது 9- ஆகிய மூன்று பேரும் அவ்களுக்கு சொந்தமான டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர்.

டூவீலரை முதியவர் பழனிச்சாமி ஓட்டிச் சென்றார். இவர்களது வாகனம் பூலாம்வலசு பிரிவு, பாரத் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, நடந்து சென்று கொண்டிருந்த சுகுமார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் சுகுமாருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதேபோல டூவீலரில் வந்த பழனிச்சாமி, ஆனந்தி, ஜீவிதா ஆகிய மூன்று பேருக்கும் காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக இவர்களை மீட்டு, சுகுமாரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும்,

ஆனந்தி, ஜீவிதா, பழனிச்சாமி ஆகிய மூவரையும் கரூரில் உள்ள செந்தில்கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவ தொடர்பாக சுகுமார் அளித்த புகார் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர் காவல்துறையினர்.இதனிடையே சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார்.

எனவே உயிர் இழந்த பழனிச்சாமியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags

Next Story