சிவகாசியில் விஷம் அருந்தி முதியவர் பலி

சிவகாசியில் விஷம் அருந்தி முதியவர் பலி
சிவகாசியில் விஷம் அருந்தி முதியவர் பலி...
சிவகாசியில் விஷம் அருந்தி முதியவர் பலியானர்.

சிவகாசி அருகே வருங்கால வைப்பு நிதி கிடைக்காத விரக்தி பட்டாசு ஆலை தொழிலாளி பூச்சிகொல்லி மருந்தை குடித்து தற்கொலை... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி முருகன் காலனியை சேர்ந்தவர் அய்யனார் (65).இவர் அதே பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 11 ஆண்டுகளாக வாட்ச்மேனாக பணியாற்றி வந்துள்ளார்.

வயது முதிர்வின் காரணமாக கடந்த 10 மாதத்திற்கு முன் இவர் பணியிலிருந்து விலகியதாக கூறப்படுகின்றது.இந்நிலையில் பட்டாசு ஆலைக்கு சென்ற முதியவர் அய்யனார், பட்டாசு ஆலை வளாகத்திற்குள் பூச்சிகொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அய்யனார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து முதியவர் அய்யனார் மகன் மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story