விஷம் குடித்த முதியவர் மரணம்

விஷம் குடித்த முதியவர் மரணம்

முதியவர் மரணம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த அகரகொரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (70). இவர், கடந்த 9-ஆம் தேதி மது குடிக்க தனது மகன் ஏழுமலையிடம் (36) பணம் கேட்டுள்ளார். ஆனால் பணம் தர முடியாது என்று கூறி விட்டு ஏழுமலை வெளியே சென்று விட்டாராம். இதனால் மனமுடைந்த சுப்பிரமணி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்பிரமணி திங்கள் கிழமை இறந்தார். இதுகுறித்து ஏழுமலை அளித்த புகாரின் பேரில் தெள்ளார் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.

Tags

Next Story