சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி

சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி

முதியவர் பலி 

செய்யாறு அருகே சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ,செய்யாறு தாலுகா ஏச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 68). இவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த சந்திரன் செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அனக்காவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story