விபத்தில் முதியவர் சாவு: விபத்து ஏற்படுத்தியவருக்கு 2 ஆண்டு சிறை . 

விபத்தில் முதியவர் சாவு: விபத்து ஏற்படுத்தியவருக்கு 2 ஆண்டு சிறை . 
சிறை தண்டனை 
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோடிமுனையை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (80). இவர் கடந்த 2010 ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ந்தேதி நடந்து குளச்சல் - குறும்பனை சாலையில் நடந்து செல்லும்போது, அதே பகுதி கொம்பன் விளாகத்தை சேர்ந்த லாரி டிரைவர் அஜ்மல்கான் (33) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஞானப்பிரகாசம் மீது மோதியதில் படுகாயமடைந்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து குளச்சல் போலீசார் அஜ்மல்கான் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு இரணியல் ஜே.எம்.கோர்ட்டில் கடந்த 13 வருடமாக நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி அமீர்தீன், அஜ்மல்கானுக்கு 2 வருட சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

Tags

Next Story