குட்டையில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு

குட்டையில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு

காவல் நிலையம் 

காட்டுமன்னார்கோவில் அருகே குட்டையில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீரானந்தபுரம்கிராமம் பெரிய தெருவை சேர்ந்த குருசாமி அதே பகுதியில் உள்ள சப்பாணி குட்டையில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார். இதைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக குட்டையில் இறங்கி நீரில் மூழ்கிய குருசாமியை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story