ஜேடர்பாளையம் அருகே சாலை விபத்தில் முதியவர் பலி

ஜேடர்பாளையம் அருகே சாலை விபத்தில் முதியவர் பலி

விபத்து,

பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவர் சிகிச்சை பலனின்றி பலி.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள குரும்பலமகாதேவியை சேர்ந்தவர் சின்னப்பன் (76). இவர் ஜோதிடம் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 17-ஆம் தேதி கள்ளுக்கடைமேட்டில் உள்ள தனது மகன் லட்சுமணனின் சலூன் கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக ஜேடர்பாளையத்தில் இருந்து சோழசிராமணி செல்லும் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமா வந்த இருசக்கர வாகனம் ஒன்று சின்னப்பன் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சின்னப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலத்தில் உள்ள அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று சின்னப்பன் உயிரிழந்தார். விபத்து குறித்து ஜேடர்பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story