டூவீலர் மோதிய விபத்தில் முதியவர் பலி - காவல்துறை வழக்கு பதிவு !

டூவீலர் மோதிய விபத்தில் முதியவர் பலி -  காவல்துறை வழக்கு பதிவு !

வழக்கு பதிவு

சைக்கிளில் சென்ற முதியவர் மீது மற்றொரு முதியவர் ஒட்டி வந்த டூவீலர் மோதிய விபத்தில் முதியவர் பலி காவல்துறை வழக்கு பதிவு.
சைக்கிளில் சென்ற முதியவர் மீது மற்றொரு முதியவர் ஒட்டி வந்த டூவீலர் மோதி விபத்து.காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, வேட்டமங்கலம் அருகே உள்ள வடுகப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் வயது 74. இவர் மார்ச் 16ஆம் தேதி இரவு 7:30- மணி அளவில், நொய்யலிலிருந்து கரூர் செல்லும் சாலையில் அவரது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் நொய்யல் பகுதியில் செயல்படும் செக்கு ஆயில் மில் அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் வேட்டமங்கலம், குளத்துப்பாளையம், அருகே உள்ள களியகாடு பகுதியைச் சேர்ந்த மணி வயது 65 என்பவர் ஓட்டி வந்த டூவீலர், தங்கவேல் ஓட்டிச் சென்ற சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சைக்கிளுடன் கீழே விழுந்த தங்கவேலுக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த தங்கவேலின் பேரன் சுரேஷ் வயது 36 என்பவர், காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த தங்கவேலின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக டூவீலரை வேகமாக ஓட்டி, உயிரிழப்புக்கு காரணமான மணி மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story