வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலி

வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலியானர்.

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே ரஞ்சன்குடி பிரிவு பாதையில் நேற்று இரவு அவ்வழியாக நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.இதில் பலத்த காயம் அடைந்த அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த முதியவர் யார், அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும், விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story