முதியவர் கொலை

முதியவர் கொலை

கொலை

கோவில்பட்டியில் ஒயின் ஷாப் பாரில் ஓசிக்கு சரக்கு தர மறுத்ததால் ஆத்திரத்தில் முதியவரை கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டியில் கிருஷ்ணாநகர் பெத்தேல் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்த முருகன் என்பவர் சொந்தமாக பார் நடத்தி வருகிறார். இந்த பாரில் கோவில்பட்டி இந்திரா நகரை சேர்ந்த (60) வயது முதியவர் குருசாமி என்பவர் வேலை பார்த்து வந்தார். அங்கு கயத்தாறு சிதம்பரம்பட்டியை சேர்ந்த மூக்கையா பாண்டியன் என்பவர் கடந்த சில தினங்களாக வந்து மது அருந்திவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். வழக்கம்போல இன்று நண்பகல் 2 மணியளவில் டாஸ்மாக் பாருக்கு வந்த மூக்கையா பாண்டியன், சரக்கு கேட்டுள்ளார். பணம் கொடுத்தால் தான் சரக்கு தர முடியும் என பார் ஊழியர் குருசாமி தெரிவித்துள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் மூக்கையா பாண்டியன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பார் ஊழியர் குருசாமியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே பார் ஊழியர் குருசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவ இடத்தில் தடயங்களை கைப்பற்றிய போலீசார் கொலை சம்பவத்தில் தொடர்புடைய மூக்கையா பாண்டியனை தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story