டூவீலரில் சென்ற முதியவர் வாகனம் கீழே விழுந்து விபத்து.

மூலிமங்கலம் பிரிவு அருகே டூவீலரில் சென்ற முதியவர் வாகனம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

மூலிமங்கலம் பிரிவு அருகே டூவீலரில் சென்ற முதியவர் வாகனம் கீழே விழுந்து விபத்து. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, அண்ணா நகர், 2வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம் வயது 69. இவர், இவருக்கு சொந்தமான டூவீலரில் மே 18ஆம் தேதி மாலை 7 மணி அளவில் சேலம்- கரூர் சாலையில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் மூலிமங்கலம் பிரிவு அருகே சென்ற போது, டூவீலரை வேகமாக இயக்கியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ராஜலிங்கத்திற்கு தலை, கால்கள், வலது கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜலிங்கத்தின் மகன் நவீன்ராஜ் வயது 38 என்பவர், அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story