சேலம் புதிய பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்த முதியவர் சாவு

சேலம் புதிய பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்த முதியவர் சாவு
X

முதியவர் பலி

சேலம் புதிய பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து முதியவர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஏற்காடு பஸ் நிறுத்தும் இடத்தில் கடந்த மாதம் முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். இதுகுறித்து அறிந்த பள்ளப்பட்டி போலீசார் அந்த முதியவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவசர வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்போது இறந்துவிட்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இறந்த முதியவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 70) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story