மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயம்

காயம்

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரடாச்சேரி அருகே உள்ள எருக்காட்டூரை அடுத்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி .இவர் நத்தம் அருகில் உள்ள காட்டூர் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் துரைசாமி மீது மோதி உள்ளது. கீழே விழுந்த அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கவாலக்குடி அருகில் உள்ள திருமாஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .இது குறித்து துரைசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் கொரடாச்சேரி போலீசார் தர்மராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story