ஜோலார்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம்!

ஜோலார்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம்!

பைல் படம்


ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூர் மேம்பாலம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூர் மேம்பாலம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம்! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தாமலேறி முத்தூர் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் கணேசன் வயது 60 இவர் வீட்டில் இருந்து திருப்பத்தூருக்கு சைக்கிள்ளில் சென்று கொண்டிருக்கும் பொழுது தாமலேரி முத்தூர் மேம்பாலம் அருகே செல்லும் பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த முதியவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இதை குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story