மூதாட்டி தற்கொலை

மூதாட்டி தற்கொலை

தற்கொலை 

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் பகுதியில் மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விராலிமலை ஒன்றியம் மாத்துார் விவேகானந்தா நகரை சேர்ந்தவர் எலிசபெத் ராணி(60) இவருக்கு பிள்ளைகள் இல்லை. கணவர் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். முதுகு தண்டுவட பாதிப்பு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்றுவந்தார்.

எனினும், அடிக்கடி வலி ஏற்பட்டதால் வாழ்க்கையில் விரக்தியடைந்த எலிசபெத் ராணி நேற்று காலை வீட்டு உத்திரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். மாத்துார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story