மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை
![மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை](https://king24x7.com/h-upload/2024/01/31/376302-image3a1000002871.webp)
தற்கொலை
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுக்கா செம்மாண்டப்பட்டி எஸ் மோட்டூரை சேர்ந்த மாணிக்கம் ரத்தினம்மாள் தம்பதியினருக்கு தியாகராஜன் என்ற மகனும் நாகமல்லி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில் அண்ணன் தங்கை இருவருக்கும் சொத்து பிரச்சனை காரணமாக சேலம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.
இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 31ஆம் தேதி சேலம் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுவதாகவும், அந்த விசாரணைக்கு மூதாட்டி ரத்தினம்மாள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரத்தினம்மாள் மனம் உடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் மூதாட்டி அவரது வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் இரண்டு கைகளிலும் கற்களைக் கட்டி கொண்டு கிணற்றில் குறித்துள்ளார்.
சம்பவம் அறிந்த காடையாம்பட்டி தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் மூழ்கி உயிரிழந்த மூதாட்டியை பிணமாக மீட்டனர். சம்பவம் அறிந்த ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேத பரிசோதனைக்காக மூதாட்டி ரத்தினம்மாள் உடலை ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.