சமையல் செய்த போது தீ காயம் அடைந்த மூதாட்டி பலி 

சமையல் செய்த போது தீ காயம் அடைந்த மூதாட்டி பலி 
பைல் படம்
கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன்கோணத்தில் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டம் , கீரிப்பாறையை அடுத்துள்ளதடிக்காரன் கோணம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்தரன் இவரது மனைவி பகவதியம்மாள் (83). இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக இவரது சேலையில் தீ பிடித்துள்ளது.

அதில் இவரது உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். இது குறித்து கீரிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story