மூதாட்டி மர்மமான முறையில் பலி

மூதாட்டி மர்மமான முறையில் பலி
பலி
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உளள கீரம்பூர் காந்திநகர் பகுதியில் வீட்டில் மர்மமான முறையில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உளள கீரம்பூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தனபாக்கியம் வயது (70). இவர் கணவர் இறந்து விட்டார்.இந்த மூதாட்டிக்கு மூன்று வாரிசுகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணம் ஆகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனபாக்கியம் கீரம்பூர் காந்திநகர் காலனியில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

நேற்று காலை தனபாக்கியத்தின் வீட்டு கதவு நீண்ட நேரமாக திறந்து கிடந்ததால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது தனபாக்கியம் காயங்களுடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஊர் பொதுமக்கள் உடனடியாக துறையூர் காவல் நிலையத்திற்கு, தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு மூதாட்டி இறப்பு கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருச்சியில் இருந்து மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். துறையூர் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story