மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

பலியானவர்

ராணிப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் அருகே மேல்வேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவகி (62). இரவு நேரத்தில் பெய்த மழையின் போது இவரது வீட்டின் முன்பக்கம் இருந்த இரும்பு கம்பி முழுவதுமாக நனைந்துள்ளது. அதிகாலை தேவகி வீட்டை விட்டு வெளியே வந்தபோது இரும்பு கம்பி மீது கை வைத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story