ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி பலி !

ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி  பலி !
விபத்து
ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி பலி. மேலும் இருவர் படுகாயம். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் ஆட்டோ ஓட்டுனர். நேற்று, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சூர்யம்மாள், 68, கிருஷ்ணவேணி, 48, முருகன், 20, ஆகியோர், ஆனந்தின் ஆட்டோவில் அச்சிறுபாக்கம் வந்துள்ளனர். பின் அச்சிறுபாக்கத்திலிருந்து சென்னை நோக்கி, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மதுராந்தகம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில், ஆட்டோ நிலை தடுமாறி சாலை ஓரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சூர்யம்மாள் என்ற மூதாட்டி உட்பட 3 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுராந்தகம் போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூர்யம்மாள் என்ற மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சையில் உள்ளனர். இந்த விபத்து குறித்து, மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story