நாகர்கோவிலில் தீ விபத்து - 80 வயது மூதாட்டி உயிரிழப்பு

நாகர்கோவிலில் தீ விபத்து - 80 வயது மூதாட்டி உயிரிழப்பு
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் ஏற்பட்ட தீவிபத்தால் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டம், நாகர்கோவில், மீனாட்சிபுரம் அழகம்மன் கோயில் அருகே தளவாய் தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் திடீர் என இன்று பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி வீட்டில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் லட்சுமி (80) என்பவர் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து குறித்து கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் கசிவால் வீடு தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் பக்கத்து வீடு களிலும் தீப்பிடித்துள்ளது. மேலும் சிலிண்டர் ஒன்றில் தீப்பிடித்த போது, தீயணைப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் அருகே கிடந்த மணலை போட்டு தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.

Tags

Next Story