மூதாட்டி கண்ணில் மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு - வாலிபர் கைது

மூதாட்டி கண்ணில் மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு - வாலிபர் கைது

காவல் நிலையம் 

திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் மூதாட்டி கண்ணில் மிளகாய் பொடி தூவி செயின் பறித்த வாலிபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம்-மங்கலம் சாலை பகுதியை சேர்ந்த கண்ணம்மாள் (60) என்ற மூதாட்டி கம்மங்கூல் விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் ஒரு வாலிபர் வந்து கண்ணம்மாளிடம் கம்மங்கூல் கேட்டுள்ளார். இதையடுத்து அவர் டம்ளரில் ஊற்றிக் கொண்டிருந்தார். திடீரென அந்த வாலிபர் மோட்டார்சைக்கிளில் வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து கண்ணம்மாள் கண்ணில் தூவினார். பின்னர் அவர் கழுத்தில் கிடந்த கவரிங் சங்கிலி மற்றும் காதில் அணிந்திருந்த கம்மலை பறித்துக் கொண்டு அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார்.

இதில் நிலைகுலைந்து போன மூதாட்டி கூச்சல் போட்டுள்ளார். அவருடைய சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் வாலிபரை மடக்கி பிடித்து அங்குள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். பின்னர் இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த முகிலன் (25) என்பதும், அவர் தற்போது 15 வேலம்பாளையம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags

Next Story