ஒளிக்கோடுகள் கவிதை தொகுப்பு புத்தக வெளியீட்டு விழா

ஒளிக்கோடுகள் கவிதை தொகுப்பு புத்தக வெளியீட்டு விழா

புத்தக வெளியீடு

குமாரபாளையத்தில் ஒளிக்கோடுகள் கவிதை தொகுப்பு புத்தக வெளியீட்டு விழா நடந்தது.

குமாரபாளையம் இலக்கியத்தளம் சார்பில் ஒளிக்கோடுகள் கவிதை தொகுப்பு புத்தக வெளியீட்டு விழா, புதுமலர் இதழாசிரியர் குறிஞ்சி தலைமை வகித்தார். இந்த புத்தகத்தை கவிஞர் மோகனரங்கன் வெளியிட, முதல் பிரதியை எழுத்தாளர் சத்தியபெருமாள் பாலுசாமி பெற்றுக்கொண்டார்.

கவிஞர் மல்லை ராமனாதன் பேசியதாவது: இன்றைய நிலையில், இளைஞர்கள் புத்தகம் எழுதுவதிலும், கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். படிப்பு, வேலை, வெளிநாடு பயணம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், தமிழ் மொழிக்கு மதிப்புக்கு கூட்டும் விதமாக, தமிழில் தங்கள் படைப்புகள் படைக்கப்படவெண்டும். அந்த புத்தகங்கள் எதிர்கால சந்ததிகளுக்கு வழிகாட்டுதலாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மூத்த வழக்கறிஞர் ப.ப.மோகன், இலக்கிய தளம் இணை செயலர் பகலவன், கவிஞர் மல்லை ராமனாதன், கண்மணி, தங்கராசு, உலகநாதன், ரவி, மணியன் உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள். நூலாசிரியர் அன்பழகன் ஏற்புரையாற்றினார்.

Tags

Next Story