ஓமலூர்: ரூ.2.92 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

ஓமலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2,92,811.81க்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த மேச்சேரி பிரிவு ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கடந்த 2நாட்களாக 14விவசாயிகள் 91மூட்டைகளில் 35.23குவிண்டால் அளவிற்கு தேங்காய் பருப்புகளை கொண்டு வந்தனர். அப்படி கொண்டு வந்த தேங்காய் பருப்புகள் ஏலம் விடப்பட்டது. இதில் மொத்தம் 2லட்சத்து 92ஆயிரத்து 811ரூபாய் 81காசுகளுக்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் தேங்காய் பருப்பு ஒரு கிலோ அதிகபட்ச விலையாக 88ரூபாய் 79காசுக்கும், குறைந்தபட்ச விலையாக 60ரூபாய் 05காசுக்கும், சராசரி விலையாக 87ரூபாய் 88/காசுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டது எனவும், அப்படி நிர்ணயம் செய்த விலைக்கு 4வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்கி சென்றதாக வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தகவல் தெரிவித்தார்.

Tags

Next Story