ஆட்டோ மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து

ஆட்டோ மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து

விபத்து 

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஆட்டோ மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சங்கிலி காளை என்பவர் இன்று காலை சேத்தூருக்கு சென்று கொண்டிருந்தார். தென்காசி சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் சென்னையில் இருந்து தென்காசி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து சங்கிலி காளை ஆட்டோவில் மோதியுள்ளது. ஆட்டோ கவிழ்ந்த நிலையில், பேருந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி நின்றது.

இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்கம் மற்றும் ஆட்டோ சேதமானது. ஆட்டோவில் சென்று கொண்டிருந்த சங்கிலி காளை தலையில் பலத்த காயங்களுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். இவருக்கு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் நடந்த முதலுதவிக்கு பின்னர், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவ்விபத்து குறித்து சேத்துர் ஊரக காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story