சங்ககிரியில் சாலையோர வீட்டுக்குள் புகுந்த ஆம்னி வேன்

சங்ககிரியில் ஆம்னி வேன் ஒன்று தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த வீட்டுக்குள் புகுந்து விபத்து ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் அருகே புள்ளாக்கவுண்டம்பட்டி புதூர் பகுதியில் சாலையில் குடிபோதையில் ஆம்னி வேணை தாறுமாறாக ஒட்டி வீட்டின் மீது மோதிய மர்ம ஆசாமியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் சங்ககிரி அருகே உள்ள தேவூர் புள்ளாக்கவுண்டம்பட்டி வடக்கு காடு பகுதியில் சாலை ஓரத்தில் பழனிச்சாமிக்கு சொந்தமான வீடு உள்ளது இந்த வீட்டின் முன் குடும்பத்தினர் அமர்ந்து இருந்தனர்.

அப்போது குமாரபாளையம் பகுதியில் இருந்து எடப்பாடி நோக்கி வந்த ஆம்னி வேண் சாலையில் தாறுமாறாக வேகத்தில் வந்ததை பார்த்த பெண்கள் பதறி அடித்து ஓடினர் இந்நிலையில் வேன் சாலை ஓரத்தில் இருந்த தென்னை கீற்று சாலையை உடைத்து வீட்டில் முட்டி நின்றது, இதனால் அதிர்ஷ்ட வசமாக குடிபோதையில் காரை ஒட்டி வந்தவர் உயிர் தப்பினார், இதுகுறித்து தேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story