அன்னபூரணி டிரஸ்ட் சார்பில் ரூ. 25 ஆயிரத்தில் புதிய குடிசை வீடு !

அன்னபூரணி டிரஸ்ட் சார்பில் ரூ. 25  ஆயிரத்தில் புதிய குடிசை வீடு !

 குடிசை வீடு

திண்டுக்கல் அருகே ரூ. 25 ஆயிரத்தில் குடிசை வீடுகள் கட்டித் தந்த சேவையின் சிகரங்கள் போற்றப்படுகின்றனர்.
திண்டுக்கல் நத்தம் செல்லும் வழியில் சாலையோரத்தில் மிகவும் சேதம் அடைந்த வீடு இருந்தது. வீட்டில் தனது மகளுடன் குடியிருந்து வந்த ஒரு பெண்மணிக்கு குடிசை வீடு ரூ. 25 ஆயிரம் மதிப்பில் அன்னபூரணி டிரஸ்ட் நிர்வாகி வேல்குமார் சார்பாக கட்டித் தரப்பட்டது. இவர் இதுவரைக்கும் 120 மேற்பட்ட ஆதரவற்ற இறந்தவர் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலகில் இன்னும் சேவைக்காக தன் குடும்பத்தை அர்ப்பணித்து வாழ்ந்து வரும் சகோதரர் வேல் குமாருக்கு சமூக ஆர்வலர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களை கண்டறிந்து அவர்களுக்கு இன்னும் பல சேவைகள் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story