தோழர் களம் தமிழ்நாடு சார்பில் தந்தை பெரியார் வீரவணக்க நாள்.

தோழர் களம் தமிழ்நாடு சார்பில் தந்தை பெரியார் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

தோழர் களம் தமிழ்நாடு சார்பில் தந்தை பெரியார் வீரவணக்க நாள். தோழர் களம் தமிழ்நாடு அமைப்பின் சார்பில் தந்தை பெரியார் 50-வது நினைவு நாள் வீரவணக்க நிகழ்வு சின்னதாராபுரம் சமத்துவபுரம் பகுதியில் தோழர்களம் தமிழ்நாடு அமைப்பின் நிறுவனர் தலைவர் தி.க.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வை தோழர் களம் தமிழ்நாடு அமைப்பின் தலைவர் கொடியேற்றி துவங்கி வைத்தார். மாநில அவைத் தலைவர் ராஜகோபால், மாநிலத் துணை அமைப்பாளர் ஞானவேல் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தலைமை நிலைய செயலாளர் தமிழன் சு.கவின்குமார் துவக்க உரையாற்றினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரவை பேரூர் கழக செயலாளர் ராஜாமுகமது,மகளிர் அணி வள்ளியம்மாள்,கஸ்தூரி ஆகியோர் வீர வணக்க உரையாற்றினார்கள். தோழர்களம் தமிழ்நாடு அமைப்பின் க.பரமத்தி ஒன்றிய செயலாளர் ராமன், அன்பு,பிரவின்,திவாகர்,அருண்குமார், கிஷோர், ராமலிங்கம்,சுப்பிரமணி,விஜய், பெரியார் பிஞ்சு மதிவதனி, தமிழ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இறுதியில் தோழர்களம் தமிழ்நாடு அமைப்பின் கரூர் மாவட்ட தலைவர் பெரிய திருமங்கலம் மணியன் நன்றி கூறினார் . இந்நிகழ்வில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் சர்வாதிகார ஆட்சியை முறியடித்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற உழைக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

மேலும், பெரியாரின் கொள்கைகளையும் பணிகளையும் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றனர்.

Tags

Next Story