நாமக்கல்லில் ஜாக்டோ- ஜியோ சார்பில் மறியல் போராட்டம்

நாமக்கல்லில் ஜாக்டோ- ஜியோ சார்பில்  மறியல் போராட்டம்

கோப்பு படம் 

நாமக்கல்லில் ஜாக்டோ- ஜியோ சார்பில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் ஜாக்டோ- ஜியோவின் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதால் அனைவரும் பங்கேற்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் க.பழனியப்பன் மற்றும் மெ.சங்கர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (டிட்டோஜாக்) செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில்,மாநில உயர்மட்டக்குழு முடிவின் அடிப்படையில் ஜாக்டோ-ஜியோவின் சார்பில் நாளை (30.01.2024- செவ்வாய்) காலை 10 மணிக்கு நாமக்கல் பஸ்நிலையம் அருகிலுள்ள பூங்காசாலையில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story