ஜோஸ் ஆலுக்காஸ் சார்பில் அரசு பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள்

ஜோஸ் ஆலுக்காஸ் சார்பில் அரசு பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள்

கும்பகோணம் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் அறக்கட்டளை சார்பில் தென்குவளவேலி அரசு பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கும்பகோணம் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் அறக்கட்டளை சார்பில் தென்குவளவேலி அரசு பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கும்பகோணம் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவன அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகை நிறுவனம் தன்னுடைய அறக்கட்டளை மற்றும் சமூக பொறுப்பு நிதி மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.‌ அதன் ஒரு பகுதியாக வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 2 லட்சத்து 98 ஆயிரம் மதிப்புள்ள பீரோ, டெஸ்க்குகள், மேஜை, நாற்காலிகள் எழுது பலகை, கரும்பலகைகள் உள்ளிட்ட பொருள்களை வழங்கியது.

ஜோஸ் ஆலுக்காஸ் கும்பகோணம் கிளை மேலாளர் ரஞ்சித், துணை மேலாளர் ஜெயராமன் ஆகியோர் பொருட்களை வழங்க பள்ளியின் தலைமை ஆசிரியர் ஐரன் பிரபா மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.‌ முன்னதாக ஊர் பொதுமக்கள் சார்பில் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தாருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவம் செய்யப்பட்டது‌.‌ மாணவர்களின் வரவேற்பு நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் விஜயகுமாரி, ராமமூர்த்தி, இளையராஜா, ரேணுகா சூரியகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பால தண்டாயுதபாணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் அஷ்ரப் அலி செய்து இருந்தார்.

Tags

Next Story