பாஜக சார்பில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளிப்பு

பாஜக சார்பில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளிப்பு

மனு அளித்தவர்கள்

சங்ககிரி பாஜக சார்பில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், சங்ககிரி பாஜக சார்பில் சங்ககிரி பழைய பேருந்து நிலையத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சங்ககிரி பாஜக மண்டலத்தலைவர் முருகேசன், பாஜக அரசு தொடர்புத்துறை மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் பேரூராட்சி செயல் அலுவலர் உஷாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-

சங்ககிரியில் சுமார் 50 ஆண்டுகளாக இயங்கி வந்த பழைய பேருந்துநிலையத்தை தற்காலிகமாக அகற்றிவிட்டு சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் பேருந்து நிறுத்தத்தை ஏற்படுத்தி உள்ளனர். தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் மழை பெய்யும் போது நிற்பதற்கு இடமில்லாமல் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

பழைய பேருந்து நிலையத்தில் கழிவறை வசதி அதனை சுற்றி அனைத்து கடைகள், மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் கடைகள், தனியார் மருத்துவமனைகள் உள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஈரோடு, பவானி, திருச்செங்கோடு, கோவை, திருப்பூர் செல்லும் பேருந்து மீண்டும் பழைய பேருந்து நிலையத்திலேயே நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் கூறியுள்ளனர்.

Tags

Next Story