விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்-அஞ்சலி

விசிக மாநாடு சென்று திரும்பிய போது சாலை விபத்தில் உயிரிழந்த நபர்களின் படத்திற்கு விசிக சார்பில் மலர் தூவி மரியாதை. சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விசிக மாநாடு சென்று திரும்பிய போது சாலை விபத்தில் உயிரிழந்த நபர்களின் படத்திற்கு பெரம்பலூர் மாவட்ட விசிக சார்பில் மலர் தூவி மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது . பெரம்பலூர்புதிய பேருந்து நிலையம் பகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்கு கடலூர் மாவட்டம் வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த உத்தர குமார், அன்புச்செல்வன் , யுவராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மீண்டும் ஊருக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவர்களது திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்து வீரவணக்கம் கோஷமிட்டனர். பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கலையரசன், விவசாய அணி மாநில செயலாளர் வீர செங்கோலன், மாவட்டத் துணைச் செயலாளர் கிருஷ்ணகுமார், பாராளுமன்ற தொகுதி செயலாளர் மன்னர் மன்னன், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் மனோகரன், வேப்பூர் ஒன்றிய செயலாளர் வரதராஜன், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் வெற்றியழகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் இடிமுழக்கம், மாவட்ட அமைப்பாளர் முரசொலி, மாவட்ட அமைப்பாளர்கள் வழக்கறிஞர் பிரிவு மணிமாறன், ஐயம்பெருமாள், அழகுமுத்து, மற்றும் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் அய்யாகண்ணு, மேலும் நிர்வாகிகள் அம்பேத்கோகுல், குணசேகரன், உள்ளிட்டவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story