நாம் தமிழர் கட்சி சார்பில் துயர் துடைப்பு நிவாரணம் வழங்கல்!
திருச்செந்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், துயர் துடைப்பு நிவாரணம் வழங்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் பொங்கல் திருநாளை கொண்டாட துயர் துடைப்பு நிவாரணம் வழங்குதல் நடைபெற்றது.
பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏது வாக துயர் துடைப்பு நிவார ணமாக மளிகைப் பொருட் கள், உடைகள் ஆகியவை உடன்குடி ஒன்றியம், பரமன் குறிச்சி ஊராட்சி, வட்டன்விளை, வெள்ளாளன்விளை பகுதிகள் மற்றும் ஆத்தூர் பேரூராட்சி,முக்காணிசாலை வளைவு பகுதிகளில் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் இரத்தின பாண்டியன் கலந்து கொண்டார்.
திருச் செந்தூர் சட்டமன்றதொகுதி தலைவர் நெப்போலியன் தலைமை தாங்கினார். தொகுதி மருத்துவ பாசறை செயலாளர் விஜய ஆனந்த், தொகுதி பொருளாளர் முத்து செல்வராஜன், தொகுதி முன்னாள் செயலாளர் மனோகரன், தொகுதி முன்னாள் துணைச் செயலாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். களப்பணிகளை தொகுதி விவசாய பாசறை செயலாளர் இந்திரசித் மேற்கொண்டார். நிகழ்வினை தொகுதி துணைச் செயலாளர் பாலமுருகன் முன்னின்று நடத்தினார். நிவாரணப் பொருட்களை முன்னாள் தொகுதி செயலாளர் பிரபு வழங்கி சிறப்பித்தார். மேலும் பிரபு, தாரணிதேவி ஐசக், ராஜகீதன் சந்தோஷம் சகோதரர்கள் நிவாரணப் பொருட்களுக்காண நிதி உதவிகளை வழங்கியிருந்தனர். இந்நிகழ்வில் கையூட்டு ஊழல் ஒழிப்புபாசறை செயலாளர் பிரின்ஸ், உடன்குடி சல்மான், திலீப், ககாரின், நாசரேத் பாஸ்கர், கிரிஜா பிரபு, தனம் குமரப்பன், தனேசு குமரப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.