பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு அன்னதானம்

பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு அன்னதானம்
ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாற்றுத் திறனாளி பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூன் 19ம் தேதி ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாற்றுத்திறனுடைய மாணவர்களான, செவி மற்றும் பேச்சுத் திறன் அற்ற சிறப்ப்பு பள்ளி யான, வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள கௌதம புத்தர், பள்ளியில், பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டன இதில் பள்ளி மாணவர்கள் இன்று பிறந்தநாள் காணும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிறந்த தினத்தில் அவர் நலமோடு வாழ இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டு, காலை உணவுகளை சாப்பிட்டனர், பெரம்பலூர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story