பிப்., 8ல் முதல்வரின் வீடு முற்றுகை !

பிப்., 8ல் முதல்வரின் வீடு முற்றுகை !

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி பிப்., 8ல் சென்னையில் முதல்வர் ஸ்டாலினின் வீட்டை முற்றுகையிட சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது. 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி பிப்., 8ல் சென்னையில் முதல்வர் ஸ்டாலினின் வீட்டை முற்றுகையிட சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.
வேடசந்துார்:தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தக் கோரி பிப்., 8 ல் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில மைய ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடந்தது.போராட்டம் குறித்த அறிக்கையை மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் முன்மொழிந்தார். பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்தக் கோரி தற்செயல் விடுப்பு போராட்டம் ஜன.,30, 31ல் நடத்தப்படும். கோரிக்கையை நிறைவேற்றாத பட்சம் பிப்., 8 முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story