கோட்டை மைதானத்தில், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் !

கோட்டை மைதானத்தில்,  சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர்   ஆர்ப்பாட்டம் !

ஆர்ப்பாட்டம்

சேலம், கோட்டை மைதானத்தில், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
.சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். அதில், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத சம்பளம், 26,000 ரூபாய் வழங்குதல்; ஒப்பந்த தொழிலாளர் மாறி சென்றாலும் பணி பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தல்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; இ.பி.எப்., பென்ஷனுக்கு குறைந்தபட்சம், 9,000 ரூபாய் என்பதை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநில துணைத்தலைவர் தியாகராஜன், மாவட்ட செயலாளர் கோவிந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story