சித்திரை திருவிழாவை முன்னிட்டு குதிரை வாகனத்தில் அருள்பாலித்த அம்மன்

சிவகாசி, பத்ரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, 'குதிரை' வாகனத்தில் எழுந்தருளி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா அதிவிமரிசையாக நடைபெற்று வருகிறது.8ம் நாள் திருவிழாவை முன்னிட்டு,ஸ்ரீபத்திரகாளியம்மன் 'குதிரை' வாகனத்தில் எழுந்தருளி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ஸ்ரீபத்திரகாளியம்மன் 'சிங்க' வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story