மோளப்பாளையத்தில் சூதாடிய ஒருவர் கைது: இருவர் கைது

மோளப்பாளையத்தில் பணம் வைத்த சூதாடியவரை கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் க. பரமத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் உதயகுமாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் அக்டோபர் 28ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் மோளப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் உள்ள முள் காட்டில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட மோளப்பாளையம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி, பாலன், சதாசிவம் ஆகிய மூன்று பேரையும் கைது செய்ய முற்பட்டபோது பாலன், சதாசிவம் ஆகிய இருவரும் தப்பி ஓடினர். முத்துச்சாமி பிடிபட்டார். மேலும், அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பிடிபட்ட முத்துசாமியை காவல் நிலையப் பிணையில் விடிவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் க. பரமத்தி காவல்துறையினர்.

Tags

Next Story