செம்மரம் கடத்திய வழக்கில் ஒருவர் கைது

செம்மரம் கடத்திய வழக்கில் ஒருவர் கைது

செம்மரம் கடத்தியவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், முடையூர் காட்டில் செம்மரங்களை வெட்டி கடத்திய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட முடையூர் காட்டில் வனத்துறை சார்பில் சுமார் 1,500 செம்மரங்கள் நடப்பட்டது . கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு செம்மர கடத்தல் கும்பல் சுமார் 25-க்கும் மேற்பட்ட செம்மரங்களை எந்திரம் மூலம் வெட்டி கடத்தி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து மோகன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய 3 பேரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story