தூத்துக்குடியில் மதுபோதையில் தவறி விழுந்து ஒருவர் பரிதாபமாக பலி

தூத்துக்குடியில் மதுபோதையில் தவறி விழுந்து ஒருவர் பரிதாபமாக பலி

கோப்பு படம் 

தூத்துக்குடியில் மதுபோதையில் தவறி விழுந்து ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடியில் மதுபோதையில் தவறி விழுந்து ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி வெள்ளப்பட்டி 5 வீடு காலனியைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் இசக்கிமுத்து (55). இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு ஜேஜே நகர் தெருவில் நடந்து சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தாராம்.

இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story