சேலம் அருகே ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி

சேலம் அருகே ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி

பைல் படம் 

சேலம் அருகே ரயிலில் அடிபட்டு இறந்தவரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் அருகே கருப்பூர்- தின்னப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 40 வயது ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். தகவல் கிடைத்ததும் சேலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story