டிப்பர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் காயம்

டிப்பர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் காயம்

விபத்து 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை கல்லக்குடியில் உள்ள சுங்கச்சாவடியில் நேற்றிரவு அரியலூரிலிருந்து டால்மியபுரம் நோக்கிச் சென்ற டிப்பர் லாரி மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் ஒருவர் காயம்.
அரியலூர் மாவடத்திலிருந்து டிப்பர் லாரி ஒன்று புறப்பட்டு புள்ளம்பாடி அருகே டால்மியாபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த்து.அப்போது திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை கல்லக்குடியில் உள்ள சுங்கச்சாவடியை கடக்கும்போது பின் னால் வந்த கார் எதிர்பாராத விதமாக லாரியின் பின்பக்க வலது புறத்தில் மோதியது.இதில் காரில் இடது புறம் அமர்ந்து பயணம் செய்த பளிங்காந்த்தம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவரை மீட்டு ஆம்புவன்ஸ் மூலம் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து கல்லக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story