விருதுநகர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் காயம்

விருதுநகர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் காயம்
காவல் நிலையம்
விருதுநகர் அருகே ராம்கோ சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான குடியிருப்பு பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் காயம் அடைந்தார்.

விருதுநகர் அருகே ஆர் எஸ் ஆர் நகர் பகுதியைச் சார்ந்தவர் பாண்டியன் இவர் மனைவி வசந்தா பாண்டியன் ராம்கோ சிமெண்ட் ஃபேக்டரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வீட்டிலிருந்து வருவதாகவும் இவர் கடந்த 10 ஆம் தேதி இரவு டீ குடிப்பதற்காக வெளியே சென்று விட்டு ராம்கோப் ஃபேக்டரி சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த பொழுது அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்த , வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது

இதில் காயமடைந்த பாண்டியன் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிகிச்சை சேர்க்கப்பட்ட நிலையில் இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி காயமடைந்த பாண்டியரின் மனைவி வசந்த அளித்த புகார் அடிப்படையில் விபத்து ஏற்படுத்திவிட்டு சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story