வளர்ப்பு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

முதுமலையில் வளர்ப்பு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் வனத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் 25-க்கும் மேற்ப்பட்ட வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் சில யானைகள் கும்கிளாக உள்ளது. இவைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வரும் காட்டு யானைகளை விரட்டவும், விவசாய பயிர்களை சேதப்படுத்தும் யானைகறை விரட்டவும் பயன்ப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வில்சன் எனும் முகாம் வளர்ப்பு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். தெப்பக்காடு யானை முகாமில் இன்று வில்சன் என்ற யானைக்கு உணவு கொடுத்துவிட்டு பாகன் அழைத்து சென்றுள்ளார் அப்போது யானைப்பாடியில் வசிக்கும் மாதன் என்பவரை வில்சன் யானை திடீரென தாக்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் உடல் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story