பேருந்தில் மோதி ஒருவர் பலி - காவல்துறை விசாரணை

பேருந்தில் மோதி ஒருவர் பலி - காவல்துறை விசாரணை

பேருந்தில் மோதி ஒருவர் பலி - காவல்துறை விசாரணை

கோடாங்கி பட்டி அருகே பேருந்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் பலி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போடியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் வக்கீல் இவர் வேலை முடிந்து நேற்று இரவு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கோடாங்கி பட்டி அருகே இருட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தை கவனிக்காமல் அதன் மீது வேகமாக மோதினார். இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story