பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சாத்தூர் அருகே சிந்தப்பள்ளியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிந்தப்பள்ளியில் சிவகாசியை சேர்ந்த கதிரேசன் என்பதற்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை நாக்பூர் லைசன்ஸ் கொண்டது அறுபதுக்கு மேற்பட்ட பட்டாசு தயாரிக்கும் அறைகள் உள்ளன. மேலும் நேற்று நூறுக்கும் மேற்பட்டோர் வேலையில் ஈடுபட்ட போது பட்டாசுக்கு மருந்து செலுத்தும் போது ஏற்பட்ட விபத்தில் சிவகாசி பகுதியில் சேர்ந்த அஜித்குமார் என்ற 21 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு சாத்தூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயணைத்தனர் மேலும் சாத்தூர் நகர காவல் துறையினர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சம்பவ இடத்திற்கு சாத்தூர் தாசில்தார் வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்

Tags

Next Story