சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி

சண்முகராஜ் 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையடிப்பட்டி கிராமத்தில் ஜெயபால் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையானது மாவட்ட வெடி பொருள் கண்காணிப்பு உரிமத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் ஐந்துக்கும் மேற்பட்ட அறைகளில் பத்துக்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலையில் பட்டாசு தயார் செய்வதற்கு தேவையான மூலப் பொருட்கள் எடுத்து வைக்கும் பணியில் கண்டியாபுரத்தை சேர்ந்த சண்முகராஜ் (36) என்ற பட்டாசு தொழிலாளி ஈடுபட்டு வந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் ஒரு அறை வெடித்து முற்றிலுமாக சேதம் அடைந்து நிலையில் அந்த அறையில் இருந்த சண்முகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை அறிந்த ஏழாயிரம் பண்ணை காவல் துறையினர் மற்றும் வெம்பக்கோட்டை, சாத்தூர் பகுதியைச் சேர்ந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிக்கிய சண்முகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து ஏழாயிரம்பண்னை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர.

Tags

Next Story