சிவகாசி அருகே இடி தாக்கி ஒருவர் பலி

சிவகாசி அருகே இடி தாக்கி ஒருவர் பலியானர்.

சிவகாசி அருகே இடி,மின்னல் பாய்ந்து பட்டாசு ஆலை உரிமையாளர் மகன் உயிரிழப்பு..3 பேர் காயம்... விருதுநகர் மாவட்டம், சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் மழை பெய்தது. மழை பெய்த போது சிவகாசி அருகே பூவநாதபுரம் கிராமத்தில் இடி,மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தன.

அப்போது அங்குள்ள மண்டபத்தின் மீது இடி,மின்னல் பாய்ந்ததில் சிவகாசி அருகே வடபட்டியை சேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர் மாரிமுத்து இவரது மகன் வேல்ஈஸ்வரன்(38) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் பெரியகுளத்துபட்டியைச் சேர்ந்த முருகேசன்,(42), அவரது மகன் 8ம் வகுப்பு படிக்கும் விக்னேஷ்(13), வடபட்டியை சேர்ந்த சேவியர்ராஜ்(38) ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் மேல் சிகிச்சைக்காக சேவியர்ராஜ் என்பவர் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து திருத்தங்கல் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story